'முதல்' பந்தில் நடையைக் கட்டிய 'ரோஹித்'... "அவர் 'அவுட்' ஆனதுக்கு பின்னடியுள்ள சேதி..." நெட்டிசன்கள் சொல்லும் 'விசித்திர' காரணம்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்  மோதி வருகின்றன.

'முதல்' பந்தில் நடையைக் கட்டிய 'ரோஹித்'... "அவர் 'அவுட்' ஆனதுக்கு பின்னடியுள்ள சேதி..." நெட்டிசன்கள் சொல்லும் 'விசித்திர' காரணம்...

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் ஆடிய மும்பை அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, அஸ்வின் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகினார். ஏற்கனவே, ரோஹித் இந்திய அணியில் காயம் காரணமாக இடம்பெறாமல் போனது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சில போட்டிகளுக்கு பிறகு மீண்டும் முந்தைய போட்டியில் மும்பை அணியில் களமிறங்கினார். அந்த போட்டியில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றியிருந்த நிலையில், இன்றைய போட்டியிலும் மும்பை ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.

இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தனது ட்விட்டர் பக்கத்தில் ரோஹித் இன்றைய போட்டியில் சதமடிக்க கூட வாய்ப்புண்டு என குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ரோஹித் இன்று டக் அவுட் ஆனார். ஏற்கனவே, கம்பீர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை புகழ்ந்து ட்வீட் செய்தால் அடுத்த போட்டிகளில் இருந்து அந்த வீரர்கள் சிறப்பாக விளையாடமாட்டார்கள் என ரசிகர்கள் கம்பீரை முன்னதாக விமர்சனம் செய்து வந்தனர்.

இப்போதும் அதே போல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், கம்பீர், ரோஹித் தொடர்பான மீம்ஸ்கள் மற்றும் பதிவுகளை அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

மற்ற செய்திகள்