Watch Video: ரசிகரால் 'தலைக்குப்புற' விழுந்து.. 'பல்டி'யடித்த வீரர்.. மைதானத்தில் நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின்போது ரசிகர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Watch Video: ரசிகரால் 'தலைக்குப்புற' விழுந்து.. 'பல்டி'யடித்த வீரர்.. மைதானத்தில் நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 45-வது ஓவரின்போது ஜடேஜா பந்து வீசினார். முத்துசாமி அந்த ஓவரின் இரண்டாம் பந்தில் ஆட்டமிழந்தார்.அடுத்த பேட்ஸ்மேனாக பிலாண்டர் களத்துக்கு வந்தார். மூன்றாம் பந்தை வீசி முடித்தார் ஜடேஜா. அப்போது ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்து மீறி நுழைந்தார்.

 

வந்தவர் நேராக ரோஹித் சர்மாவிடம் சென்று அவரின் காலில் விழ முயற்சி செய்தார். இதனைத்தடுக்க முயற்சி செய்த ரோஹித் சர்மா மைதானத்தில் பல்டி அடித்து தலைகுப்புற விழுந்தார். இந்த செயலால் வீரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைய, பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து அந்த ரசிகரை இழுத்து சென்றனர்.அதன் பின்னர் போட்டி தொடர்ந்தது.