"பண்டிகையை கொண்டாடுங்க மக்களே... உச்சகட்ட மகிழ்ச்சியில் 'ஆர்சிபி' ரசிகர்கள்.. அதுக்கு பின்னால் இருக்கும் அசத்தல் 'காரணம்'... செம 'வைரல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது டி 20 போட்டியில், நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

"பண்டிகையை கொண்டாடுங்க மக்களே... உச்சகட்ட மகிழ்ச்சியில் 'ஆர்சிபி' ரசிகர்கள்.. அதுக்கு பின்னால் இருக்கும் அசத்தல் 'காரணம்'... செம 'வைரல்'!!

மழையின் காரணமாக, இந்த போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி, 10 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 76 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியின் இளம் வீரர் பின் ஆலன் (Finn Allen) 29 பந்துகளில், 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். இன்னும் சில தினங்களில், ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடவுள்ளார் பின் ஆலன்.

முன்னதாக, பெங்களூர் அணியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் பிலிப் இடம்பெற்றிருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக பின் ஆலனை பெங்களூர் அணி ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கவுள்ள சமயத்தில், ஆலனின் அதிரடி ஆட்டம், பெங்களூர் அணியின் ரசிகர்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்துள்ளது. மேலும், ஆலன் இன்னிங்ஸ் தொடர்பாக அதிகம் ட்வீட்களையும் பெங்களூர் ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

 

 

ஏற்கனவே, அந்த அணியில் கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் உள்ளதால், பின் ஆலன் இணைவது, அந்த அணியின் பேட்டிங்கிற்கு இன்னும் பலம் சேர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்