'நான் ரெடி ஆயிட்டேன்...' 'விளையாடுவாரா மாட்டாரான்னு டவுட்ல இருந்தப்போ வந்த பாசிடிவ் சிக்னல்...' இனி 'அவரோட' விளையாட்டே 'வெறித்தனம்' தான்...! - உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் சிஸ்கே ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டு களத்தில் இறங்கியுள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'நான் ரெடி ஆயிட்டேன்...' 'விளையாடுவாரா மாட்டாரான்னு டவுட்ல இருந்தப்போ வந்த பாசிடிவ் சிக்னல்...' இனி 'அவரோட' விளையாட்டே 'வெறித்தனம்' தான்...! - உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் சிஸ்கே ரசிகர்கள்...!

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஒருநாள் போட்டி , டி20, டெஸ்ட் என அனைத்து தளங்களிளும் தன் திறமையை நிரூபித்தத்தவர்.

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்ட போது ஜடேஜா டெஸ்ட் தொடரின் போது விரலில் ஏற்பட்ட காயத்தினால் அந்த தொடரிலிருந்து விலகினார்.

அதன் பின் சிகிச்சை பெற்றுவந்த ஜடேஜா, காயம் சரியாகாத சூழலில் இங்கிலாந்து அணிகக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் தற்போது ஜடேஜா தன் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்வான செய்தியை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு பேட்டும், பந்தும் எடுப்பதில் மகிழ்ச்சி' என குறிப்பிடுள்ளார்.

காயம் காரணமாக 2021 ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஜடேஜா பங்கு கொள்வரா? மாட்டாரா? என்ற சந்தேகத்திலிருந்து மீண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களும் ஜடேஜாவின் கம்பேக்கை ஹேப்பியாக கொண்டாடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்