My India Party

"ரவி சாஸ்திரி இந்த விஷயத்த என்கிட்ட சொல்லிட்டாரு..." போட்டுடைத்த 'ஆஸ்திரேலிய' முன்னாள் 'வீரர்'... "'டீம்' ரகசியத்த இப்படியா வெளியே சொல்றது??..." வெடித்த 'சர்ச்சை'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது கிரிக்கெட் போட்டிகளை ஆடி வருகிறது.

"ரவி சாஸ்திரி இந்த விஷயத்த என்கிட்ட சொல்லிட்டாரு..." போட்டுடைத்த 'ஆஸ்திரேலிய' முன்னாள் 'வீரர்'... "'டீம்' ரகசியத்த இப்படியா வெளியே சொல்றது??..." வெடித்த 'சர்ச்சை'!!!

ஒரு நாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், டி 20 தொடரை இந்திய

அணி கைப்பற்றியிருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 17 ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இது பார்க்கப்படும் நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பவுள்ளார். அதே போல, ஆஸ்திரேலியா அணி வீரரான வார்னரும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க போவதில்லை. ரோஹித் ஷர்மா, இஷாந்த் ஷர்மா போன்ற முக்கிய வீரர்களும் இந்திய அணியில் இல்லாததால் இந்த டெஸ்ட் தொடரில் எப்படிப்பட்ட திட்டங்களை இந்திய அணி செயல்படுத்த போகிறது என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ள கருத்து ஒன்று சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தன்னுடன் மது அருந்தியதாகவும், அப்போது இந்திய அணியில் மூன்றாவது பந்து வீச்சாளராக உமேஷ் யாதவைத் தான் களமிறக்க போகிறோம் என்ற தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் இந்த தகவல் ஊடகங்களிலும் வெளியான நிலையில் சற்று பரபரப்பு நிலவியுள்ளது. பும்ரா, ஷமி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது பந்து வீச்சாளராக சைனி, உமேஷ் யாதவ், சிராஜ் ஆகியோரில் யார் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி இருந்து வந்தது.

தற்போது, இயான் சேப்பலிடம் ரவி சாஸ்திரி அணியின் ரகசியத்தை உடைப்பது போல கருத்து ஒன்றை தெரிவித்துள்ள நிலையில், இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியால் திட்டங்களை வகுக்க இந்த கருத்து எளிதாக இருக்கும் என்பதால் ரவி சாஸ்திரியின் செயலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்