சேட்டை புடிச்ச ஆளா இருப்பார் போல நம்ம ‘தல’.. தண்ணீர் கொடுத்துட்டு ‘கிண்டலாக’ தோனி சொன்ன விஷயம்.. பழைய நினைவுகளை பகிர்ந்த ரெய்னா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின்போது மைதானத்துக்கு தண்ணீர் எடுத்து வந்து நகைச்சுவையாக தோனி கூறிய பழைய நினைவுகளை சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார்.

சேட்டை புடிச்ச ஆளா இருப்பார் போல நம்ம ‘தல’.. தண்ணீர் கொடுத்துட்டு ‘கிண்டலாக’ தோனி சொன்ன விஷயம்.. பழைய நினைவுகளை பகிர்ந்த ரெய்னா..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இதனை அடுத்த சில நிமிடங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

Raina recalled hilarious banter with Dhoni during Ireland T20I

அதேபோல் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டி ஒன்றில், ‘தோனி ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால், தானும் உடனே விலகி விடுவேன்’ என சுரேஷ் ரெய்னா கூறினார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக இருவரும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Raina recalled hilarious banter with Dhoni during Ireland T20I

இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா, தோனியுடனான பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில், ‘2018-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினோம். அந்த சமயம் நான் தண்ணீர் கேட்டதும் பேட், கிளவுஸ் அடங்கிய ஒரு பெரிய கிட் பேக்குடன் தோனி மைதானத்துக்குள் வந்தார்.

Raina recalled hilarious banter with Dhoni during Ireland T20I

அப்போது, உனக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்கொள். மறுபடியும் கூப்பிடாத, வெளியே ரொம்ப குளிராக இருக்கிறது. நான் இன்னொரு தடவை எல்லாம் வரமாட்டேன் என சிரித்துக் கொண்டே சொன்னார்’ என்று தோனி கிண்டலாக கூறிய நினைவுகளை சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்