Vilangu Others

உலக செஸ் சேம்பியனையே 39 மூவ்-ல் முடித்துவிட்ட தமிழக சிறுவன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

புகழ்பெற்ற ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுள் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தாவும் ஒருவர் ஆவார். 13 வயதான இவர் இந்தத் தொடரில் இதுவரையில் 8 புள்ளிகளை பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் சேம்பியனான மெக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

உலக செஸ் சேம்பியனையே 39 மூவ்-ல் முடித்துவிட்ட தமிழக சிறுவன்..!

39 மூவ்

கார்ல்சன் உடனான போட்டியில் துவக்கம் முதலே சிறப்பாக காய்களை நகர்த்தினார் பிரக்ஞானந்தா. கருப்பு நிற காய்களுடன் அபாரமாக விளையாடி இவர் டார்ஸ்ச் வகை கேம்-படி ஆடி வெற்றியும் பெற்றார். முன்னதாக தொடர்ந்து 3 வெற்றிகளைப் பெற்று இருந்த உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சன் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனிடம் தோல்வி அடைந்தது செஸ் விளையாட்டு வீரர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

R Praggnanandhaa defeated World No. 1 Magnus Carlsen

தற்போது நடைபெற்று வரும் ஏர்திங்ஸ் ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் முதல் சுற்றில் ஒரு வீரருக்கு 15 போட்டிகள் நடைபெறும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளும் டிரா செய்தால் ஒரு புள்ளியும் வழங்கப்படும். 

12 வது இடம்

இந்தத் தொடரில் இதுவரையில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பிரக்ஞானந்தா, 8 புள்ளிகளை பெற்றிருக்கிறார். இதன்மூலம் அவர் 12 வது இடத்தில் இருக்கிறார். நடப்பு தொடரில் லெவ் அர்னோனியை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்லைன் தொடரில் கார்ல்சன் 19 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.

R Praggnanandhaa defeated World No. 1 Magnus Carlsen

துவக்கத்தில் சில போட்டிகளில் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்ததால் கவலையில் இருந்த இந்திய செஸ் ரசிகர்கள் இப்போது அவர் உலக சேம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருப்பதால் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

செஸ், .பிரக்ஞானந்தா, மெக்னஸ்கார்ல்சன், PRAGGNANANDHAA, AIRTHINGSMASTERSCHESS

மற்ற செய்திகள்