VIDEO: ‘பாக்கவே பாவமா இருக்கு’.. கிரவுண்டில் படுத்து அழுத டெல்லி வீரர்.. நொறுங்கிப்போன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்ததால் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள் கண்கலங்கிய வீடியோ வெளியாகி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

VIDEO: ‘பாக்கவே பாவமா இருக்கு’.. கிரவுண்டில் படுத்து அழுத டெல்லி வீரர்.. நொறுங்கிப்போன ரசிகர்கள்..!

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றில், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் எடுத்தனர்.

Prithvi Shaw crying on ground after DC loss against KKR

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் மற்றும் சிவம் மாவி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Prithvi Shaw crying on ground after DC loss against KKR

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.5 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களும், சுப்மன் கில் 46 ரன்களும் எடுத்தனர். இதில் வெங்கடேஷ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், இப்போட்டியில் தோல்வி அடைந்ததால் கேப்டன் ரிஷப் பந்த், ப்ரித்வி ஷா, ஆவேஷ் கான் உள்ளிட்ட டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள் கண்கலங்கினர். அதில் ப்ரித்வி ஷா மைதனாத்திலேயே அழுது படுத்துவிட்டார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் டெல்லி அணிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்