இனிமேல் என் 'வாழ்க்கை' முன்னாடி மாதிரி இருக்காது...! - பியூஸ் சாவ்லா குடும்பத்தில் நடந்த சோகம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் என் 'வாழ்க்கை' முன்னாடி மாதிரி இருக்காது...! - பியூஸ் சாவ்லா குடும்பத்தில் நடந்த சோகம்...!

இந்திய கிரிக்கெட் சுழற் பந்து வீச்சாளர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் பியூஸ் சாவ்லா. இவரின் தந்தை பிரமோத் குமார் சாவ்லா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கொரோனா வைரஸின் பிந்தைய விளைவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த பிரமோத் குமார் சாவ்லா  சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

Pius Chawla's father dies of corona virus outbreak

தந்தையின் இழப்பு குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பியூஸ் சாவ்லா, 'என் தந்தை எங்களை விட்டு பிரிந்தார். எனது வாழ்க்கை முன்பு போல் இருக்காது எனது பலத்தின் தூண் போன்ற நபரை இழந்து விட்டேன்' எனக் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்