'ஐபிஎல் போட்டி தொடங்கும் தேதி வெளியீடு...' - அதிகாரபூர்வமாக அறிவித்த பிசிசிஐ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'ஐபிஎல் போட்டி தொடங்கும் தேதி வெளியீடு...' - அதிகாரபூர்வமாக அறிவித்த பிசிசிஐ...!

கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இதனிடையே இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்  மோத உள்ளன.  இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பிற்பகல் போட்டிகள் 3.30 மணிக்கும் இரவு நடைபெறும் போட்டிகள் 7.30 மணிக்கும் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்