'தோனி' ரிட்டயர்டு ஆனா என்ன??... "அங்க காட்டுன மாஸ இங்கயும் காட்டலாம்"... 'அழைப்பு விடுக்கும் பிரபலம்!!!’ - அழைப்பை ஏற்பாரா, தோனி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்திருந்தார்.

'தோனி' ரிட்டயர்டு ஆனா என்ன??... "அங்க காட்டுன மாஸ இங்கயும் காட்டலாம்"... 'அழைப்பு விடுக்கும் பிரபலம்!!!’ - அழைப்பை ஏற்பாரா, தோனி?

இவரது இந்த திடீர் முடிவு, கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிர்வலைகளை உருவாக்கியது. ரசிகர்கள் மட்டுமில்லாது, பல கிரிக்கெட் வீரர்களும், முக்கிய பிரமுகர்களும் உருக்கமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், 'பாஜக'வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தோனியின் ஓய்வு முடிவு குறித்து ட்வீட் செய்துள்ளார். 'தோனி கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது கிரிக்கெட் அணிக்காக போராடும் திறனும், அணியை சிறந்த முறையில் வழிநடத்தும் அவரின் தலைமை குணமும், பொது வாழ்க்கையில் தேவைப்படுகிறது. அவர் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும்' என ட்வீட் செய்துள்ளார். 

 

மற்ற செய்திகள்