“ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க”.. ரசிகர் உருக்கமாக எழுதிய கடிதம்.. ஆட்டோஃகிராப் போட்டு பாராட்டிய தோனி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே ரசிகரின் கடிதத்திற்கு தோனி அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க”.. ரசிகர் உருக்கமாக எழுதிய கடிதம்.. ஆட்டோஃகிராப் போட்டு பாராட்டிய தோனி..!

Also Read | திட்டமிட்டே சீன விமான விபத்து நடந்ததா? Black box-ஐ ஆய்வு செய்த அமெரிக்க நிபுணர்கள் சொன்ன பரபரப்பு தகவல்..!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருவதால், தினமும் போட்டி பரபரப்பாகவே காணப்படுகிறது.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டியில் விளையாடி 4-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் சென்னை அணி வெளியேறுவது இதுதான் இரண்டாவது முறை. அதனால் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு ரசிகர் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் தோனி மீதான அன்பும் , தனது வாழ்க்கையில் தோனி ஏற்படுத்திய தாக்கத்தையும் அந்த ரசிகர் உருக்கமாக வெளிப்படுத்தி இருந்தார்.

இதனைப் பார்த்த தோனி அந்தக் கடிதத்துக்கு பதில் அளித்துள்ளார். அதில், ‘நன்றாக எழுதப்பட்டுள்ளது . வாழ்த்துகள்’ என்று எழுதியதோடு, அதில் கையெழுத்தும் போட்டுள்ளார். இதை சென்னை அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் 8 போட்டிகளில் சிஎஸ்கே அணியை கேப்டனாக ஜடேஜா வழி நடத்தினார். இவர் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால் மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை ஜடேஜா ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

CRICKET, MS DHONI, CSK, CSK FAN

மற்ற செய்திகள்