Kadaisi Vivasayi Others

Mr.IPL சுரேஷ் ரெய்னாவுக்கு வந்த சோதனை.. "சிஎஸ்கே கூட கண்டுக்காம போயிடுச்சே.." அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலம், தற்போது பெங்களூரில் வைத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Mr.IPL சுரேஷ் ரெய்னாவுக்கு வந்த சோதனை.. "சிஎஸ்கே கூட கண்டுக்காம போயிடுச்சே.." அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்..!

இதில், பல முன்னாள் வீரர்கள், எதிர்பார்த்ததை விட அதிக தொகைக்கு ஏலம் போய் வருகிறார்கள். இதுவரை நடைபெற்றுள்ள ஏலத்தின் அடைப்படையில், ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 12.25 கோடி ரூபாய்க்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.

முதல் இரண்டு சுற்றுகள் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது மூன்றாவது சுற்று நடைபெற்று வருகிறது. முன்னதாக, இரண்டாவது சுற்றில், Mr. IPL எனப்படும் சுரேஷ் ரெய்னா பெயர் இடம்பெற்றிருந்தது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த சுரேஷ் ரெய்னாவை மீண்டும் சிஎஸ்கே அணி எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ரெய்னாவை அணியில் எடுக்க, சிஎஸ்கே முயற்சி மேற்கொள்ளவில்லை. இது மட்டுமில்லாமல், எந்த அணியும் ரெய்னாவை எடுக்க முன் வரவில்லை. இதனால், 'Unsold' என ரெய்னா அறிவிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரின் நம்பர் 1 வீரரான சுரேஷ் ரெய்னா, 'Unsold' என அறிவிக்கப்பட்டது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணியில், ரெய்னா - தோனி இணைந்து ஆடுவதை பார்க்கவே, ரசிகர்கள் கூட்டம் மிகுந்த ஆரவாரத்தில் இருக்கும். ஆனால், இந்த முறை ரெய்னாவை எடுக்க சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் எடுக்க முன் வராமல் போனது, பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அதிகம் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும், நாளைய ஏல முடிவு நேரத்தில், 'Unsold' வீரர்கள் மீண்டும் வரும் போது, சிஎஸ்கே அல்லது ஏதாவது அணிகள், ரெய்னாவை எடுக்க முயற்சிக்கும் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.

SURESH RAINA, MR IPL, CHENNAI SUPER KINGS, IPL AUCTION 2022

மற்ற செய்திகள்