‘அவருக்கு ஏன் இந்திய அணியில் இடம் கொடுக்கல’... ‘கண்டிப்பா அவர சேர்த்து இருக்கணும்’... ‘மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு’... ‘கிரிக்கெட் ஜாம்பவான் ஆதரவு’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய சூர்யகுமார் யாதவை ஆஸ்திரேலியாவுக்கான இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.

‘அவருக்கு ஏன் இந்திய அணியில் இடம் கொடுக்கல’... ‘கண்டிப்பா அவர சேர்த்து இருக்கணும்’... ‘மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு’... ‘கிரிக்கெட் ஜாம்பவான் ஆதரவு’

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வரும் 27-ம் தேதி முதல் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட 3 தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள், ஐபிஎல் தொடரின் இடையில் அறிவிக்கப்பட்ட நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் அதில் இடம்பெறவில்லை.

இதனால் பல முன்னாள் வீரர்கள் பிசிசிஐ-யை விமர்சித்திருந்தனர். இதுகுறித்து மனம் திறந்த சூர்யகுமார், ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறாததால், தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் ஆலோசனையின் காரணமாகவே, அதிலிருந்து வெளிவந்ததாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதுபற்றி பிரையன் லாரா கூறியதாவது, சூர்யகுமார் யாதவ் அருமையான வீரர். ஒரு வீரர் ரன்களை குவிப்பதை மட்டுமே தான் கருத்தில் கொள்வதில்லை. மாறாக, அவர்களுடைய ஆட்டத்தின் தொழில்நுட்பம், நெருக்கடியான சூழல்களை சமாளிக்கும் திறமை, எந்த நிலைகளில் பேட்டிங் செய்கின்றனர் என்பது அனைத்தையும் வைத்து பார்க்கும்போது, சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவை அனைத்தையும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார்.

தொடக்க வீரர்களைத் தவிர 3-ம் நிலையில் விளையாடும் வீரரே அணியின் சிறந்த பேட்ஸ்மேன். அவரைத் தான் ஒரு அணி நம்பும். மும்பை அணிக்கு அப்படித்தான் உள்ளார் சூர்யகுமார் யாதவ். இதனால்  இந்திய அணியில் ஏன் அவர் இடம்பெற்றிருக்கக் கூடாது’ எனக் கேட்கிறேன் என்றார்.

மற்ற செய்திகள்