Watch Video: பழி வாங்க நெனைச்சதெல்லாம் சரிதான்.. ஆனா ரூல்ஸை மறந்துட்டியே தம்பி.. நெட்டின்சன்கள் கிண்டல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் டி 20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரண்டு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி நவம்பர் 1-ம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது.

Watch Video: பழி வாங்க நெனைச்சதெல்லாம் சரிதான்.. ஆனா ரூல்ஸை மறந்துட்டியே தம்பி.. நெட்டின்சன்கள் கிண்டல்!

இலங்கை வீரர் சந்தகன் பவுலிங்கின் போது  டேவிட் வார்னர் அடித்த பந்து, நேராக எதிர்முனையில் இருந்த ஸ்டெம்பில் பட்டது. அப்போது அங்கே நிற்க வேண்டிய ஸ்மித் கிரீஸை தாண்டி சென்று விட்டார். ரூல்ஸ்படி சந்தகன், ஸ்டெம்ப்பை பந்தோடு சேர்த்து தூக்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் பந்தை ஒருகையில் வைத்துக் கொண்டு, மறுகையில் ஸ்டெம்ப்பை தூக்கினார். இதனால் ஸ்மித் ரன் அவுட்டாகும் சுலப வாய்ப்பு வீணானது. மேலும் சந்தகன் செய்த மிஸ்டேக்கை பார்த்து ஸ்மித் சத்தம் போட்டு சிரித்து விட்டார்.

முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் சந்தகனை இதேபோல ரன்-அவுட் செய்தார். அதற்கு பழிவாங்க நினைத்த சந்தகன் ரூல்ஸை மறந்ததால் நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.