'11 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் சுவாரஸ்யம்'... 'அரையிறுதியில் மீண்டும் மோதும் 2 கேப்டன்கள்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை தொடரில் 11 ஆண்டுகளுக்குப் பின் கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணியும் மோத உள்ள சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

'11 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் சுவாரஸ்யம்'... 'அரையிறுதியில் மீண்டும் மோதும் 2 கேப்டன்கள்’!

2019 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் வரும் செவ்வாய்க்கிழமை மோதவுள்ளது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை 2-வது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலிய-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த 2 போட்டிகளிலும் வெல்லும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

முதல் அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி, 11 ஆண்டுகளுக்கு முன் நடந்தப் போட்டியை நினைவுப்படுத்துகிறது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியும், நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சனும் இருந்தனர்.

தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இதே கேப்டன்கள் தலைமையில், உலகக் கோப்பை தொடரில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. 2008-ம் ஆண்டு நடைப்பெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2008 -ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிம் சவுதி ஆகியோர் இருந்தனர். இவர்கள் தற்போதைய உலகக் கோப்பை தொடரிலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.