"என்ன காமெடி பண்ணிட்டு இருக்கியா??.." கோபத்தில் Pant-ஐ திட்டிய Rahul.. எதுக்கு இப்டி மொறச்சு பாக்குறாரு??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்கா : போட்டிக்கு மத்தியில், பண்ட்டை முறைத்து பார்த்து கொண்டே, கோபத்தில் ராகுல் பேசும் வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

"என்ன காமெடி பண்ணிட்டு இருக்கியா??.." கோபத்தில் Pant-ஐ திட்டிய Rahul.. எதுக்கு இப்டி மொறச்சு பாக்குறாரு??

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே தற்போது இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரை, தென்னாப்பிரிக்க அணி 2  -1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது.

விமர்சனம்

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி தான் வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணி தங்களிடம் இருந்த வெற்றி வாய்ப்பைத் தவற விட்டதாகவும் பல விமர்சனங்கள் எழுந்தது.

தவறை சரி செய்யணும்

இதற்கு மிக முக்கிய காரணம், போட்டிக்கு மத்தியில் கேப்டன் ராகுல் எடுத்த சில தவறான முடிவுகள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை தான் என அனைவரும் கருதினர். இன்றைய போட்டியில், இப்படிப்பட்ட பல முக்கிய தவறுகளை சரி செய்து கொண்டு ஆடினால் மட்டுமே, இந்திய அணியால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முடியும். இன்று தோல்வி அடையும் பட்சத்தில் தொடரை இழக்க வேண்டி நேரிடும்.

கோலி ரசிகர்கள் அதிர்ச்சி

தொடர்ந்து, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ராகுல் மாற்றம் தவான் ஆகியோர், ஓரளவுக்கு சிறப்பாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். அணியின் ஸ்கோர் 63 ஆக உயர்ந்த போது, தவான் 29 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த கோலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

மீண்டும் ஏமாற்றம்

கேப்டன்சியில் இருந்து விலகியுள்ளதால், நிச்சயம் நெருக்கடி இன்றி, சிறப்பாக பேட்டிங் செய்து நீண்ட நாளாக வெயிட்டிங்கில் இருக்கும் அவரின் 71 ஆவது சதத்தை, இந்த ஒரு நாள் தொடரில் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கு மத்தியில், முதல் போட்டியில் 51 ரன்கள் எடுத்து அவுட்டான கோலி, இந்த முறை ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறியது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திட்டிய ராகுல்

இதனிடையே, ரிஷப் பண்ட்டை, கே எல் ராகுல் திட்டும் சம்பவம், போட்டிக்கு நடுவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலி அவுட்டான பிறகு, ரிஷப் பண்ட் களமிறங்கினார். கேசவ் மகாராஜ் வீசிய பந்தை எதிர்கொண்ட பண்ட், அதனை ஆன் சைட் பக்கம் அடித்தார். தொடர்ந்து, அந்த பந்திற்கு பண்ட் மற்றும் ராகுல் ஆகியோர், ரன் ஓட முயற்சித்துள்ளனர்.

இணையத்தில் வைரல்

ஆனால், அப்பகுதியில் ஃபீல்டிங் நின்ற பாவுமா, வேகமாக பந்தை பிடித்து, பவுலர் திசையில் வீசினார். இரு பேட்ஸ்மேன்களும், பேட்டிங் பக்கம் நிற்க, ரன்  அவுட் செய்ய வாய்ப்பு இருந்தும் அதனை மகாராஜ் தவற விட்டார். இதனால், வேகமாக ஓடிய ராகுல், மீண்டும் கிரீஸுக்குள் சென்றார்.

தவறான அழைப்பின் காரணமாக, பண்ட்டை முறைத்துப் பார்த்த ராகுல், கோபத்தில் அவரை ஏதோ வசை பாடவும் செய்தார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

அதிர்ஷ்டமாக கிடைத்த வாய்ப்பை இருவரும் பயன்படுத்திக் கொண்ட நிலையில், சிறப்பாக ஆடிய ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர், 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

KLRAHUL, RISHABHPANT, IND VS SA, VIRAT KOHLI, BAVUMA, MAHARAJ, விராட் கோலி, ரிஷப் பண்ட், கே எல் ராகுல்

மற்ற செய்திகள்