"நல்லா இருக்கீங்களா ரிஷப்?".. குட்டீஸ்கள் அனுப்பிய லெட்டர்.. ரிஷப் பண்டின் நெகிழ்ச்சி பதிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தனக்கு சிறுவர்கள் அனுப்பிய கடிதங்களின் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

"நல்லா இருக்கீங்களா ரிஷப்?".. குட்டீஸ்கள் அனுப்பிய லெட்டர்.. ரிஷப் பண்டின் நெகிழ்ச்சி பதிவு..!

                     Images are subject to © copyright to their respective owners.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 30 ODI மற்றும் 66 T20I போட்டிகளில்  முறையே 865 மற்றும் 987 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் வங்க தேச கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆடி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சில தினங்களுக்கு முன்னர் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஊன்றுகோலின் துணையுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் ரிஷப் பண்டின் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ரிஷப் பண்ட் விரைந்து நலமாகி அணிக்கு திரும்ப வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சிறுவர்கள் கைப்பட எழுதிய கடிதங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஸ்பைடர்மேன் ஓவியத்துடன் வாழ்த்து செய்திகளும் அதில் இருக்கின்றன. மேலும், ஒரு கடிதத்தில்,"அன்பான ரிஷப், நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். எனக்கு பிடித்த பொருட்களை பகிர்ந்திருக்கிறேன்" என எழுதப்பட்டுள்ளது. அதனுடன் ஐஸ்கீரிம் உள்ளிட்ட உணவு பொருட்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு பக்கத்தில் ரிஷப் பண்டின்

இந்திய ஜெர்சியின் ஓவியங்களும் இடம்பெற்றிருக்கின்றது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ள பண்ட் அதில்,"குழந்தைகள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வழி அருமையாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே தற்போது வைரலாகவும் பரவி வருகிறது.

RISHABH PANT, FANS, CRICKET

மற்ற செய்திகள்