IPL2020: ‘இப்படியா ஒரண்ட இழுத்துக்குவீங்க?!’.. RCBvsMI மேட்சில் முட்டிக்கொண்ட வீரர்கள்! கோபப்பட்டு பிசிசிஐ எடுக்கும் அதிரடி ‘நடவடிக்கை!’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய  நேற்றைய ஐபிஎல்லின் 48வது லீக் போட்டியில் போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிக்குமிடையே சூடான மோதல் இருந்தது. 

IPL2020: ‘இப்படியா ஒரண்ட இழுத்துக்குவீங்க?!’.. RCBvsMI மேட்சில் முட்டிக்கொண்ட வீரர்கள்! கோபப்பட்டு பிசிசிஐ எடுக்கும் அதிரடி ‘நடவடிக்கை!’

ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்டியாவின் அவுட் ஆக, ஆர்சிபி வீரர் கிறிஸ் மோரீஸூக்கும் பாண்டியாவுக்கும், இடையில் வார்த்தை போர் மூண்டது.  இதனால் ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை இருவரும் மீறியதாக, தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம் இருவருக்கும் தகுந்த தண்டனை விதிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த போட்டியின்போது, ஹர்திக் பாண்டியா அவுட் ஆனதும், பந்து வீசிய ஆர்சிபி பௌலர் கிறிஸ் மோரீஸ் பாண்டியாவை சீண்ட, பதிலுக்கு பாண்டியா ஏதோ சொல்ல,  இருவருக்கும் வார்த்தை போர் ஆரம்பித்தது. இந்நிலையில் இவர்கள் பெறவிருக்கும் தண்டனையை, நடுவர் தீர்மானிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்