பாவங்க மனுஷன் ‘நொறுங்கி’ போய்ட்டாரு.. தோல்விக்கு பின் வந்த வீரரின் ‘சோக’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டது குறித்து மேக்ஸ்வெல் ட்விட்டரில் சோக பதிவிட்டுள்ளார்.

பாவங்க மனுஷன் ‘நொறுங்கி’ போய்ட்டாரு.. தோல்விக்கு பின் வந்த வீரரின் ‘சோக’ ட்வீட்..!

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டி நேற்று (10.10.2020) அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை கொல்கத்தா அணி எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் கார்த்திக் 58 ரன்களும், சுப்மன் கில் 57 ரன்களும் எடுத்தனர்.

IPL2020: KXIP Maxwell sad tweet after unlucky loss against KKR

இதனை அடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் (74 ரன்கள்) மற்றும் மயங்க் அகர்வால் (56) ஜோடி அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. 115 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை (மயங்க் அகர்வால்) பஞ்சாப் அணி இழந்தது. இதனை அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் (16 ரன்கள்), சிம்ரான் சிங் (4 ரன்கள்) அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

IPL2020: KXIP Maxwell sad tweet after unlucky loss against KKR

இந்தநிலையில் 158 ரன்களை எடுத்த பஞ்சாப் அணி, கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் சூப்பர் ஓவருக்கு செல்லும் நிலையில் இருந்தது. அப்போது சுனில் நரேன் வீசிய கடைசி பந்தை, பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் பந்து பவுண்டரி லைனுக்கு சுமார் 2 இஞ்ச்-க்கு முன்னர் குத்தி சென்றது. இதனால் 4 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டதால் பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் வெற்றியை பறிகொடுத்தது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட மேக்ஸ்வெல் ‘தகர்ந்தது’ என பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்