"இன்னிக்கு CSK-வோட விளையாடறாங்க... 'ஆனா, ரசிகர்கள் ஆவலோட எதிர்பார்த்த... முக்கிய வீரர் விளையாடல!'... - அப்படியா, யாரு அவரு???"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

"இன்னிக்கு CSK-வோட விளையாடறாங்க... 'ஆனா, ரசிகர்கள் ஆவலோட எதிர்பார்த்த... முக்கிய வீரர் விளையாடல!'... - அப்படியா, யாரு அவரு???"

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் களமிறங்கவுள்ள இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை முடித்துக் கொண்டு ஜோஸ் பட்லர் தற்போது யூஏஇயில் தன்னுடைய குடும்பத்தினருடன் குவாரன்டைனில் உள்ளதால், அவர் இன்றைய போட்டியில் பங்கேற்ற மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.

IPL2020 CSKvsRR Jos Buttler To Miss Opening Game Against Chennai

இதுகுறித்துப் பேசியுள்ள அவர், "ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் தற்போது நான் குடும்பத்தினருடன் குவாரன்டைனில் உள்ளேன். அதனால் இன்று ஷார்ஜாவில் நடைபெறவுள்ள சிஎஸ்கேவிற்கு எதிரான அணியின் முதல் போட்டியில் நான் பங்கேற்க மாட்டேன். என்னுடைய குடும்பத்தினரை உடன் அழைத்துவர அனுமதித்த நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான் டாப் ஆர்டரில் விளையாடவே விரும்புகிறேன். இருப்பினும் எந்த இடத்தில் இறக்கினாலும் விளையாட தயாராக உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்