'முன்னவிட இப்போதான் தோனிகிட்ட உஷாரா இருக்கணும்'... 'எச்சரிக்கை விடுத்துள்ள'... 'பிரபல வீரர் கூறும் முக்கிய காரணம்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டியில் தோனிக்கு பந்துவீச இருக்கும் அனைத்து பந்துவீச்சாளர்களையும் இர்பான் பதான் எச்சரித்துள்ளார்.

'முன்னவிட இப்போதான் தோனிகிட்ட உஷாரா இருக்கணும்'... 'எச்சரிக்கை விடுத்துள்ள'... 'பிரபல வீரர் கூறும் முக்கிய காரணம்!'...

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பலரும் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களையும், கணிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள தோனி, கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழித்து ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது.

IPL2020 CSK Irfan Pathan Warns Bowlers To Be Careful Against MSDhoni

இந்நிலையில், ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், தோனிக்கு பந்துவீச காத்திருக்கும் பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இர்பான் பதான், "தோனிக்கு பந்துவீச இருக்கும் அனைத்து பந்துவீச்சாளர்களையும் எச்சரிக்கிறேன். கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ள வேண்டும். பந்துவீச்சாளர்கள் தோனியின் வயதை அல்லது கிரிக்கெட்டிலிருந்து அவர் எடுத்துள்ள இடைவெளியை கருத்தில் கொள்ளக்கூடாது.

IPL2020 CSK Irfan Pathan Warns Bowlers To Be Careful Against MSDhoni

இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்பதற்கு முன் தோனியின் ஆட்டம் எப்படி இருந்தது என அனைவருக்கும் தெரியும். அது போன்ற ஆக்ரோஷமான ஆட்டத்தை இந்த தொடரில் தோனி வெளிப்படுத்துவார் என நம்புகிறேன். ஐபிஎல் தொடரை தவிர்த்து தோனிக்கு இப்பொழுது வேறு எந்த கூடுதல் சுமையும் கிடையாது. இந்த தொடரில் தோனி தன்னுடைய அதிரடியை துவங்கிவிட்டால் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய பொறுமையை இழக்க நேரிடும். அதனால் தோனிக்கு பந்துவீச உள்ள பந்துவீச்சாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்