'ஏதோ தெரியாம... ஒரு flow-வுல சொல்லியிருப்பாரு!.. அதுக்காக ஒரு பெரிய மனுஷன இப்படியா பண்றது'?.. சுனில் கவாஸ்கருக்கு வந்த சோதனை!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிண்டலடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஏதோ தெரியாம... ஒரு flow-வுல சொல்லியிருப்பாரு!.. அதுக்காக ஒரு பெரிய மனுஷன இப்படியா பண்றது'?.. சுனில் கவாஸ்கருக்கு வந்த சோதனை!!

2021 ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் போட்டிகளை வர்ணிக்கும் பணியை கவனித்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

அவர் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை வர்ணித்திருந்தார். அப்போது டெல்லி வீரர் ரபாடா வீசிய பவுன்சரில் துல்லியம் இல்லை என கவாஸ்கர் விமர்சித்திருந்தார். அதனை பென் ஸ்டோக்ஸ் கிண்டலடித்து டிவிட்டரில் பதிவிட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

"இது ஒரு மோசமான பவுன்சர். நீங்கள் துல்லியமாக பவுன்சர் வீச விரும்பினால் அது ஆஃப் ஸ்டெம்ப் திசையில் வீச வேண்டும்" என சொல்லியிருந்தார் கவாஸ்கர். ஆனால், ரீப்ளேவில் பார்க்கும் போது, அது ஆஃப் ஸ்டெம்புக்கு சரியாக பவுன்சராகி இருந்தது. அதனை தான் ஸ்மைலி மூலம் TROLL செய்துள்ளார் ஸ்டோக்ஸ். அந்த ஸ்மைலி முகத்தை கையால் அடித்துக் கொள்வது போல இருந்தது.

 

 

இந்த சீசனில் பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். எனினும், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி உள்ளார்.

 

மற்ற செய்திகள்