Karnan usa

கோலி பேட்டிங் ஆட வந்தா போதும்... ரோகித் இத கண்டிப்பா பண்ணுவாரு!.. ரோகித் விரித்த வலையில்... அலேக்காக விழுந்த கோலி!.. இந்த முறையும் போச்சா!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பைக்கு எதிரான போட்டியில் ஓப்பனராக களமிறங்கிய ஆர்சிபி கேப்டன் விராட் கோலியை வீழ்த்த ரோகித் சர்மா அதிரடி வியூகத்தை வகுத்திருந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

கோலி பேட்டிங் ஆட வந்தா போதும்... ரோகித் இத கண்டிப்பா பண்ணுவாரு!.. ரோகித் விரித்த வலையில்... அலேக்காக விழுந்த கோலி!.. இந்த முறையும் போச்சா!!

மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தொடக்கத்தில் அதிரடி காட்டிய போதும் இறுதியில் திணறியது.  

14வது ஐபிஎல் தொடர் மிகுந்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. முதலில் அதிரடியாக ஆடிய மும்பை அணி இறுதியில் ஆர்சிபி அணி ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் சுருண்டது.

பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி ஓப்பனராக களமிறங்கி எதிர்பார்த்தது அளவில் செயல்படவில்லை. 29 பந்துகளை சந்தித்த அவர் 33 ரன்களை எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும் அடங்கும். நிதானமாக ஆடிவந்த அவரை எதிர்பார்த்தது போலவே பும்ரா எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டாக்கினார். 

இங்கிலாந்து டி20 தொடரில் ஓப்பனிங் வீரராக சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி ஐபிஎல் போட்டியிலும் தொடக்க வீராக ஆடுவேன் என அறிவித்தது பல அணிகளுக்கும் தலைவலியை கொடுத்தது.

ஏனெனில், கோலி கடந்த 2016ம் ஆண்டு ஓப்பனராக களமிறங்கி 973 ரன்களை குவித்தார். இதில் 4 சதங்களும் அடங்கும். இந்த ஸ்கோர் தான் ஒரு சீசனில் அதிகமாக எடுக்கப்பட்ட தனி நபர் ரன் ஆகும். ஆனால் இந்த முறை பும்ராவால் 33 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். 

ஆட்டத்தின் முன்னர் கோலி - பும்ரா போட்டி குறித்து ஆகாஷ் சோப்ரா கணித்திருந்தார். அதில், விராட் கோலி பேட்டிங்கிற்கு களமிறங்கும் போதெல்லாம், ரோகித் சர்மா பும்ராவை தான் ஓவர் வீச அழைப்பார்.

பும்ராவின் பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முயற்சி செய்து விராட் கோலி 2-3 முறை அவுட்டாகியுள்ளார். வழக்கமாக விராட் கோலி இதுபோன்று அவுட்டாக மாட்டார். ஆனால், பும்ராவிடம் மட்டும் அடித்து ஆட முயற்சித்து தவறான ஷாட்களால் அவுட்டாகி வெளியேறுவார் என தெரிவித்தார்.

ஆகாஷ் சோப்ரா கணித்தது போலவே விராட் கோலி, பும்ராவின் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். கோலி விக்கெட்டை காலி செய்ய பும்ரா தான் சரியான தேர்வு என்பது ரோகித் சர்மாவுக்கு நன்றாக தெரிந்துள்ளது. இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இனிமேலாவது பும்ராவிடம் கோலி எளிதில் அவுட்டாகாமல் ஆட வேண்டும் என்பதே ஆர்சிபி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

 

மற்ற செய்திகள்