"'ஐபிஎல்' முடிஞ்சு போச்சி,,. இனி என்ன தான்யா பண்றது??.." சோகத்தில் 'ரசிகர்'கள்... வைரலாகும் 'மீம்ஸ்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த இரண்டு மாதங்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

"'ஐபிஎல்' முடிஞ்சு போச்சி,,. இனி என்ன தான்யா பண்றது??.." சோகத்தில் 'ரசிகர்'கள்... வைரலாகும் 'மீம்ஸ்'கள்!!!

கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் மூலம் மக்கள் புத்துணர்ச்சியடைந்தனர். தினமும் ஐபிஎல் போட்டிகள் மூலம் பொழுது போன நிலையில் நேற்றுடன் போட்டிகள் முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

அது மட்டுமில்லாமல், இத்தனை நாட்கள் ஐபிஎல் போட்டிகளைக் கொண்டு மக்கள் பொழுதை கழித்து வந்த நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் ட்விட்டரில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இனி வழக்கம் போல போரிங் வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்றும், நாளை முதல் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் இருக்கிறோம் என குறிப்பிட்டு மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பான பதிவுகள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. 

 

மற்ற செய்திகள்