அப்போ 'அது' உண்மை தானா?... சின்ன தல எடுத்த 'அதிரடி' முடிவு... இனி வெளையாட மாட்டாரா?கலங்கிப்போன ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த வருடம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை அணி 3 போட்டிகளில் இதுவரை விளையாடி 1 போட்டியில் வென்று, 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக டெல்லி அணியுடனான தோல்விக்கு பின் ரசிகர்கள் சென்னை அணியின் சின்ன தல என புகழப்படும் சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

அப்போ 'அது' உண்மை தானா?... சின்ன தல எடுத்த 'அதிரடி' முடிவு... இனி வெளையாட மாட்டாரா?கலங்கிப்போன ரசிகர்கள்!

இதையடுத்து சென்னை அணியின் சி.ஈ.ஓ காசி விஸ்வநாதன்,'' ரெய்னா இனி அணிக்குள் வர மாட்டார். என்ன செய்ய வேண்டும் என்பது வீரர்களுக்கு தெரியும். அவரின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம்,'' என தெரிவித்தார். இதைப்பார்த்த சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெய்னா இன்றி சென்னை அணி தத்தளிக்கும் நிலையில் ஏன் இந்த பிடிவாதம்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

IPL 2020: Suresh Raina unfollowed CSK Twitter page

இந்த நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணியை அன்பாலோ செய்திருப்பதாகவும், இதேபோல சென்னை அணி பின்தொடரும் கணக்குகளில் சுரேஷ் ரெய்னா இல்லை என்றும் ஒரு செய்தி பரவி வந்த நிலையில், அதில் தற்போது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.                                           

மற்ற செய்திகள்