'சென்னை' திணறும்... அடுத்தடுத்து 4 சிக்ஸ் அடிப்பேன்... 5 வருடங்களுக்கு முன்பே 'கணித்த' வீரர் ... ஆடிப்போன ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி தன்னுடைய முதல் வெற்றியை பெற்றுள்ளது. 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மீம்ஸ் போட்டு சென்னை அணியை தாளித்து வருகின்றனர்.

'சென்னை' திணறும்... அடுத்தடுத்து 4 சிக்ஸ் அடிப்பேன்... 5 வருடங்களுக்கு முன்பே 'கணித்த' வீரர் ... ஆடிப்போன ரசிகர்கள்!

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் 5 ஆண்டுகளுக்கு முன்பு கணித்த விஷயம் தற்போது நிஜமாகி உள்ளது. அவர் தன்னுடைய ட்விட்டரில் வரிசையாக 6666 என ட்வீட் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்ச்சர் வரிசையாக நான்கு சிக்ஸர்கள் அடித்தார்.

IPL 2020: RR Player Jofra Archer's old tweet goes Viral

மற்றொரு ட்வீட்டில் ஒரே ஓவரில் 30 ரன்கள் வருமா?என கேட்டிருந்தார். நேற்று சென்னை அணி வீரர் லுங்கி நிங்கிடி நேற்று ஒரே ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மற்றொரு ட்வீட்டில் சென்னை அணி திணறும் என தெரிவித்து இருந்தார். அதேபோல அதுவும் நடைபெற்று விட்டது. இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே என்னுடைய திருமணம் எப்போது நடைபெறும் என அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மற்ற செய்திகள்