தொடர்ந்து 8-வது முறையாக 'மண்ணை' கவ்விய மும்பை இந்தியன்ஸ்... கேப்டனை துரத்தும் 'மோசமான' ராசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் வென்ற சென்னை அணி மும்பை அணியிடம் கடந்தாண்டு பைனலில் தோற்றதற்கு பழிதீர்த்து கொண்டது. முதலில் பேட் செய்த மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடர்ந்து 8-வது முறையாக 'மண்ணை' கவ்விய மும்பை இந்தியன்ஸ்... கேப்டனை துரத்தும் 'மோசமான' ராசி!

அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் வாட்சன், முரளி விஜய் சொதப்பினாலும் அடுத்து வந்த பாப் டூ பிளசிஸ், ராயுடு நங்கூரம் போல நச்சென்று நின்றனர். கடைசியாக வந்த கடைக்குட்டி சிங்கம் சாம் கரணும் தன்னுடைய பங்குக்கு வெளுத்தெடுக்க சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.

IPL 2020: Mumbai Indians never won First match in IPL

இந்த நிலையில் மும்பையின் தோல்விக்கு ரோஹித் சர்மாவின் மோசமான ராசி தான் காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் மும்பை அணி ஓபனிங் மேட்சில் விளையாடி உள்ளது. ஆனால் இதில் ஒருமுறை கூட மும்பை வெற்றி பெறவில்லை. அதே நேரம் சென்னை அணி பலமான மும்பையை வீழ்த்தி தன்னுடைய முதல் வெற்றியை ருசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்