‘அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து கர்ஜனையை விட...’கே.ஜி.எஃப் ஸ்டைலில் பதிலடி.. ஹர்பஜன் சிங் வைரல் டுவீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கே.ஜி.எஃப் ஸ்டைலில் டுவீட் ஒன்றை செய்துள்ளார்.

‘அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து கர்ஜனையை விட...’கே.ஜி.எஃப் ஸ்டைலில் பதிலடி.. ஹர்பஜன் சிங் வைரல் டுவீட்!

ஐபிஎல் டி20 லீக்கின் 15 -வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் மோதிக் கொண்டன.

இதில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது முதல் சருக்கலாக அமைந்தது. ஆனாலும் தோனி இப்போட்டியில் விளையாடி 12 ரன்கள் எடுத்ததன் மூலம் சென்னை அணிக்காக விளையாடி 4000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதில் சமீபத்தில் சென்னை அணிக்காக விளையாடி 5000 ரன்களை கடந்து ரெய்னா முதல் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் தோல்வியைடைந்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சளார் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கே.ஜி.எஃப் படம் ஸ்டைலில் டுவீட் ஒன்று செய்துள்ளார். அதில், அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள்,தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் "தோல்வியின்றி வரலாறா" என அவர் பதிவிட்டுள்ளார்.

IPL, IPL2019, HARBAJANSINGH, CSK, WHISTLEPODU, YELLOVE