RRR Others USA

”அப்பா சொர்க்கத்துல இருந்து என்ன பாத்துப்பீங்கன்னு….” ரிஷப் பண்ட்டின் emotional post!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது தந்தையைப் பற்றி உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

”அப்பா சொர்க்கத்துல இருந்து என்ன பாத்துப்பீங்கன்னு….” ரிஷப் பண்ட்டின் emotional post!

200 மீ உயரத்தில் தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்த கார்.. அலறி ஓடிய மக்கள்.. என்ன ஆச்சு?

ரிஷப் பண்ட் அறிமுகம்…

ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணிக்குக் கிடைத்த வீரர்களில் முக்கியமானவர் ரிஷப் பண்ட். ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங் மூலமாக கவனம் ஈர்த்த பண்ட், உடனடியாக இந்திய அணியில் இடம்பிடித்தார். தோனியின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கலக்கி வருகிறார்.

டெஸ்ட்டில் கலக்கும் பண்ட்…

பண்ட் போன்ற அதிரடி வீரர்கள் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வாளவாக சோபிப்பதில்லை. ஆனால் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார். குறிப்பாக ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸ்களில் அவரின் சிறப்பான ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தியா சார்பாக முதல் முதலாக ஐசிசி ப்ளேயர் ஆஃப் தி மன்த் விருதைப் பெற்ற வீரராக பண்ட் இருக்கிறார்.

Indian cricketer rishab pant emotional status on his dad

ஐபிஎல் கேப்டன்சி…

கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் பண்ட் , 2 ஆண்டுகளாக ஐபிஎல்  தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.  கடந்த ஆண்டு டெல்லி அணியை இறுதிப் போட்டிவரை தன் தலைமையில் அழைத்துச் சென்றார். இப்போது ஐபிஎல் அணியைத் தலைமை தாங்குபவர்களில் இளம் வயது கேப்டனாக ரிஷப் பண்ட் இருக்கிறார்.

தந்தையைப் பற்றி உருக்கமான பதிவு…

இந்நிலையில் தற்போது ரிஷப் பண்ட் மறைந்த தன்னுடைய தந்தையப் பற்றி உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ரிஷப் பண்ட்டின் தந்தை ராஜேந்திரா பண்ட் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மறைந்தார். இந்நிலையில் தற்போது தந்தையைப் பற்றி தன்னுடைய பதிவில் ‘நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் அப்பா.  என் அப்பா, நான் நானாக இருந்த போதும், நான் என்னவாக ஆக விரும்பினேனோ அதற்காகவும் என்னைஆதரித்து அன்பு செலுத்தினார். தந்தைகள் வலிமையாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது.

Indian cricketer rishab pant emotional status on his dad

அவர்களின் வலிமை நமக்கு பாதுகாப்புணர்வைக் கொடுக்கிறது. நீங்கள் இப்போது சொர்க்கத்தில் இருப்பீர்கள் அப்பா. அங்கிருந்தும் என்னை பாதுகாப்பீர்கள் என்று தெரியும். என்னுடைய அப்பாவாக இருந்ததற்கு நன்றி. நான் எப்பொழுதும் உங்களை மிஸ் செய்து கொண்டும் உங்கள் மீது அன்பு செலுத்திக்கொண்டும் இருப்பேன். நாம் மீண்டும் சந்திக்கும் வரை’ என நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து ரசிகர்கள் பலரும் ரிஷப் பண்ட்டிடம் ஆறுதலான நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.

ஆந்திராவையே அலறவிடும் விநோத திருவிழா.. பல ஆண்டுகளாக தொடரும் காதல் கதை..!

CRICKET, INDIAN CRICKETER, RISHAB PANT, RISHAB PANT EMOTIONAL STATUS, DAD, ரிஷப் பண்ட், இந்திய கிரிக்கெட் அணி, ஐபிஎல்

மற்ற செய்திகள்