Toss போடணும்.. காசு எங்க?.. கிரவுண்டில் நடந்த சுவாரஸ்யம்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோதின. இதில் டாஸ் போடும்போது நடந்த சம்பவம் பலரையும் புன்னகைக்க வைத்திருக்கிறது.

Toss போடணும்.. காசு எங்க?.. கிரவுண்டில் நடந்த சுவாரஸ்யம்.. வைரல் வீடியோ..!

Also Read | ஏர்போர்ட்ல திரு திரு-ன்னு முழிச்ச பயணி.. அவர் கொண்டுவந்த மிஷின் மேலதான் சந்தேகமே வந்திருக்கு.. பிரிச்சு பார்த்ததும் அதிகாரிகளே அதிர்ந்து போய்ட்டாங்க..!

ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற T20 தொடரை இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாம் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

IND vs SA Javagal Srinath forgets handing coin at toss time

அதன்படி பேட்டிங்கை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 79 ரன்களும், ஹென்ரிக்ஸ் 74 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில், சிராஜ் 38 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்தியா வெற்றி

இதனையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சேஸிங்கை துவங்கியது. இந்திய அணியில் இஷான் கிஷன் 93 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 113 ரன்களும் குவித்து அணியை வெற்றிபெற செய்தனர். அபாரமாக விளையாடி சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு நாள் தொடரும் தற்போது சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி, நாளை (11.10.2022) நடைபெற உள்ளது.

IND vs SA Javagal Srinath forgets handing coin at toss time

டாஸ்

இந்த போட்டியில் டாஸ் போடும்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றும் நடந்தது. போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கேஷவ் மஹராஜ் ஆகியோர் டாஸ் போட களத்திற்கு வந்தனர். அப்போது, மேட்ச் ரெஃப்ரியான ஜகவல் ஸ்ரீநாத்தும் உடன் நின்றிருந்தார். வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் டாஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகும் ஸ்ரீநாத் அமைதியாக இருந்தார். அப்போது, டாஸ்-க்கான காயின் யாரிடம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார் சஞ்சய்.

ஷிகர் தவன் தனது அருகில் நின்றிருந்த ஸ்ரீநாத்தை பார்க்க அப்போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த காயினை வெளியே எடுக்க, அனைவரும் சிரித்துவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | BREAKING: உ.பி முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்.. அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்..!

CRICKET, IND VS SA, JAVAGAL SRINATH

மற்ற செய்திகள்