"ரிஷப் பண்ட்டை கன்னத்துல அறைவேன்.. இப்படி உடம்ப கெடுத்து வச்சிருக்காரு".. உரிமையுடன் கடிந்துகொண்ட கபில்தேவ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ், ரிஷப் பண்ட் குறித்து கோபத்துடன் பேசியிருக்கிறார்.

"ரிஷப் பண்ட்டை கன்னத்துல அறைவேன்.. இப்படி உடம்ப கெடுத்து வச்சிருக்காரு".. உரிமையுடன் கடிந்துகொண்ட கபில்தேவ்..!

                       Images are subject to © copyright to their respective owners.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பண்ட் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்திய அணியின் தலைச்சிறந்த இளம் வீரராக வலம் வந்த ரிஷப் பண்ட், திடீரென விபத்தில் சிக்கி இருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே போல, விரைவில் அவர் மீண்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் கபில் தேவ் ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார். நடைபெற இருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா குறித்து யூடியூப் சேனலில் பேசியிருந்த கபில் தேவ்,"ரிஷப் விரைவில் குணமாகி வர வாழ்த்துகிறேன். வந்த பிறகு அவரை கன்னத்தில் அறைவேன். உன்னுடைய விபத்தால், ஒட்டுமொத்த அணியும் நிலைகுலைந்துள்ளது என கேட்பேன். நான் அவரை நேசிக்கிறேன் ஆனால் எனக்கு அவர் மீது கோபம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் ஏன் இத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள்? அவர் தன்னுடைய நலனை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும். ஆனால் குழந்தைகள் தவறு செய்தால் அறையும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு" எனத் தெரிவித்திருக்கிறார்.

ரிஷப் பண்ட் பற்றி கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் பேசியிருப்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

RISHABH PANT, KAPIL DEV, CRICKET

மற்ற செய்திகள்