'யாருக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்கக் கூடாது'!.. ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமிக்கு நேர்ந்த துயரம்!.. நொறுங்கிப் போன தோழி ஹிமா தாஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒலிம்பிக் போட்டியின் போது சகோதரியை இழந்த தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு ஹிமா தாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'யாருக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்கக் கூடாது'!.. ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமிக்கு நேர்ந்த துயரம்!.. நொறுங்கிப் போன தோழி ஹிமா தாஸ்!

2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்றன. அதில் கலந்துக்கொள்ள தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி சென்றிருந்தார். அப்போது, டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் தனலட்சுமி பங்கேற்றிருந்த சமயத்தில் அவர் அக்கா கடந்த மாதம் ஜூலை 12ம் தேதின்று திடீரென உயிரிழந்துவிட்டார்.

ஆனால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்த தனலட்சுமிக்கு இந்த செய்தி தெரியவந்தால், அவரால் முழுமையாக விளையாட்டில் கவனம் செலுத்த முடியாது என்று கருதி, அவரது சகோதரி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை உறவினர்கள் தெரிவிக்கவில்லை.

அதையடுத்து, போட்டிகள் முடிந்து வீடு திரும்பிய தனலட்சுமி, சகோதரியின் மறைவை அறிந்து விமான நிலையத்திலேயே கதறி அழுதார். இந்த நிலையில், தனலட்சுமியின் சகோதரி மறைவுக்கு தடகள வீராங்கனை ஹிமா தாஸ், ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், "ஒரு தடகள வீராங்கனையின் உண்மையான தியாகம்" என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்