'மேட்ச்' பாக்க வந்த 'ரசிகை'யின் கையில் இருந்த 'போர்டு'... அதுல இருந்த ஒரு 'லைன்'... 'கேமரா'ல பட்டதும் வேற 'லெவல்'ல வைரலாயிடுச்சு!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி 20 தொடரை கைப்பற்றியுள்ளது.

'மேட்ச்' பாக்க வந்த 'ரசிகை'யின் கையில் இருந்த 'போர்டு'... அதுல இருந்த ஒரு 'லைன்'... 'கேமரா'ல பட்டதும் வேற 'லெவல்'ல வைரலாயிடுச்சு!!!

முன்னதாக, கொரோனா தொற்று காரணமாக, கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளைக் காண 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்தது முதலே, போட்டி மைதானத்தில் அவர்களால் நிகழும் சில சம்பவங்கள் அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடரின் போது, ரசிகர் ஒருவர் அதானிக்கு எதிரான போர்டு ஒன்றுடன் மைதானத்திற்குள் வந்தது கடும் சர்ச்சையை கிளப்பியது.

அதே போல, இந்திய இளைஞர் ஒருவர், போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது தனது ஆஸ்திரேலியா காதலியிடம் காதலை வெளிப்படுத்தினர். அதனை காதலியும் ஏற்றுக் கொள்ள மைதான ஜோடி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் லைக்குகளை அள்ளிக் குவித்தது.

இந்நிலையில், இன்று போட்டியைக் காண வந்த பெண் ஒருவர் கையில் வைத்திருந்த பதாகையில் இருந்த வாக்கியம் ஒன்றும் அதிகம் ஹிட்டடித்துள்ளது. அதில், 'ஒவ்வொரு பவுண்டரிகள் அடிக்கும் போதும் நான் எனது பார்ட்னரை முத்தமிடுவேன்' என எழுதப்பட்டிருந்தது.

இது அங்கிருந்த கேமராவில் பட, சிறிது நேரத்திலேயே அதிகம் வைரலானது. இரு அணிகளும் சேர்த்து இந்த போட்டியில் கிட்டத்தட்ட 400 ரன்கள் வரை குவித்திருந்த நிலையில், மொத்தம் 28 ஃபோர்களும், 16 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்