‘கிரிக்கெட் உலகில் அடுத்தடுத்து நடக்கும் சோகம்’!.. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கிரிக்கெட் உலகில் அடுத்தடுத்து நடக்கும் சோகம்’!.. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்..!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்காணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Former India fast bowler RP Singh's father Shiv Prasad passes away

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை ஷிவ் பிரசாத் சிங் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் நெருங்கிய நண்பரான இருவர், 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார்.

Former India fast bowler RP Singh's father passes away

தனது தந்தை மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆர்.பி.சிங், ‘எனது தந்தை ஷிவ் பிரசாத் சிங் காலமானதை ஆழ்ந்த வருத்தத்துடனும், சோகத்துடனும் தெரிவிக்கிறோம். அவர் கோவிட்19 நோயால் பாதிக்கப்பட்டு மே 12-ம் தேதி உயிரிழந்தார்’ என பதிவிட்டுள்ளார். ஆர்.பி.சிங்கின் தந்தை மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்த நிலையில் ஆர்.பி.சிங்கின் தந்தையும் கொரோனா தொற்றால் உயிரிழந்தது, கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்