RRR Others USA

“அவர் ஒரு தடவை கூட டி20 டீமுக்கு கேப்டன்ஷி பண்ணதில்ல”.. ஜடேஜாவுக்கு இருக்கும் சிக்கல்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜடேஜாவுக்கு உள்ள முக்கிய பிரச்சினை குறித்து முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.

“அவர் ஒரு தடவை கூட டி20 டீமுக்கு கேப்டன்ஷி பண்ணதில்ல”.. ஜடேஜாவுக்கு இருக்கும் சிக்கல்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி நேற்று திடீரென விலகினார். இதனை அடுத்து புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணியில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தோனியுடன் ஜடேஜா பயணித்து வருகிறார். தோனி சேர்த்து வைத்த புகழை தொடர்ந்து எடுத்துச் செல்ல ஜடேஜாதான் தகுதியானவர் என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும் இந்த சீசன் முழுவதும் ஜடேஜாவுடன் இருந்து அவரை தோனி தயார்படுத்துவார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜடேஜா கேப்டன்சி செய்வதில் பிரச்சினை இருப்பதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘ஜடேஜா எப்போதுமே பவுலராகதான் இருந்துள்ளார். ஆனால் கடந்த 2 சீசன்களாக பேட்டிங்கில் தன்னை ஒரு ஹீரோவாக மாற்றிக் கொண்டுள்ளார். பேட்டிங் அவரை தரமான ஆல்ரவுண்டர் ஆக்கியுள்ளது. அதனால் 3D கிரிக்கெட்டராக உருவெடுத்தார். தற்போது கேப்டன் பதவியும் வந்துள்ளதால் 4D கிரிக்கெட்டராக மாறியுள்ளார்.

Former CSK player on Jadeja captaincy role

ஜடேஜா இதுவரை டி20 கிரிக்கெட்டில் எந்த அணியையும் வழிநடத்தியதே இல்லை. அணியின் முக்கிய பொறுப்புகள் ஏற்கனவே அவரின் தலை மீது உள்ளது. முக்கிய இடங்களில் ஃபீல்டிங் செய்ய வேண்டும், பேட்டிங் செய்ய வேண்டும். பவுலிங்கில் அணிக்கு உதவ வேண்டும். இவை எல்லாவற்றையும் மீறி தான் கேப்டன்சி பணியை அவர் மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் சவாலாக இருக்கும்’ என பத்ரிநாத் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்