IPL 2020: ஐபிஎல் 'ஏலத்தில்' இருந்து... பிரபல வீரர் 'திடீர்' விலகல்... காரணம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் ஏலம் வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 332 கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 8 அணிகளும் எந்த பிளேயரை எடுக்க ஆர்வம் காட்டும்? யாரை காத்திருக்க வைக்கும் என்பது போன்ற எதிர்பார்ப்புகளால் இந்த ஏலம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

IPL 2020: ஐபிஎல் 'ஏலத்தில்' இருந்து... பிரபல வீரர் 'திடீர்' விலகல்... காரணம் இதுதான்!

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சாம் பில்லிங்ஸ் இந்த ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு தான் எந்தவொரு ஐபிஎல் ஏலத்திலும் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும், கவுண்டி அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

2018-ம் ஆண்டில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட சாம் பில்லிங்ஸ் அந்த ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி 108 ரன்கள் எடுத்தார். ஆனால் 2019-ம் ஆண்டில் அவர் 1 போட்டியில் மட்டுமே விளையாடினார். மேலும் சமீபத்தில் அவர் சென்னை அணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.