"சேம்பியன் மீண்டு வருவான்"... ரிஷப் பண்டை சந்தித்த லெஜெண்ட் யுவராஜ்.. வைரலாகும் புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விபத்தில் சிக்கி குணமடைந்து வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்டை சந்தித்திருக்கிறார். இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

"சேம்பியன் மீண்டு வருவான்"... ரிஷப் பண்டை சந்தித்த லெஜெண்ட் யுவராஜ்.. வைரலாகும் புகைப்படம்..!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நான் ஒருமுறை கூட CUP அடிக்கல.. ஆனா நமக்கு Fans".. தொடர் தோல்வியில் RCB மகளிர் அணி.. கோலி கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!

ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

Former Cricketer Yuvaraj Singh met Rishabh Pant Tweet Goes Viral

Images are subject to © copyright to their respective owners.

விபத்து

இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே, தன்னால் பல்துலக்க முடிவதாகவும் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகவும் பண்ட் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Former Cricketer Yuvaraj Singh met Rishabh Pant Tweet Goes Viral

Images are subject to © copyright to their respective owners.

யுவராஜ் சிங்

சமீபத்தில் தண்ணீருக்குள் நடைப் பயிற்சி செய்யும் வீடியோவை ரிஷப் பண்ட் பகிர்ந்திருந்தார். இந்த சூழ்நிலையில் இந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பண்டை சந்தித்திருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,"இந்த சேம்பியன் மீண்டும் விரைவில் மீண்டும் வருவார். நேர்மறை எண்ணங்களும் வேடிக்கை குணங்களும் கொண்ட நீங்கள் இன்னும் வலிமையாக மீண்டு வர வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரிஷப் பண்டுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | கொளுத்தும் வெயில்.. இந்த 3 மணி நேரம் வெளியே வராதீங்க... அரசின் அட்வைஸ்.. வேதர்மேன் சொன்ன குட்நியூஸ்..!

CRICKET, YUVARAJ SINGH, RISHABH PANT, YUVARAJ SINGH MET RISHABH PANT

மற்ற செய்திகள்