'பாதி' மீசையை ஷேவ் செய்து கொண்ட 'ரசிகர்'... அதற்கும், 'ரோஹித் ஷர்மா'விற்கும் இருக்கும் 'Connection'!!.. ஒரு 'சுவாரஸ்ய' சம்பவம்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 309 ரன்கள் தேவை.

'பாதி' மீசையை ஷேவ் செய்து கொண்ட 'ரசிகர்'... அதற்கும், 'ரோஹித் ஷர்மா'விற்கும் இருக்கும் 'Connection'!!.. ஒரு 'சுவாரஸ்ய' சம்பவம்!!!

காயம் காரணமாக, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடாமல் இருந்த ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு மூன்றாவது போட்டியில் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் 26 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 52 ரன்களும் எடுத்து அவர் அவுட்டானார்.

இந்நிலையில், ரோஹித் ஷர்மாவால் இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தனது ஒரு பக்க மீசையை எடுத்துள்ளார். அஜய் என்ற அந்த ரசிகர், சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில், 'ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த டெஸ்ட் வீரர் என்றால், நான் தான் இந்த உலகத்தில் அழகான மனிதர் என்பதற்கு சமம். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் என மூன்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்களின் 30 பந்துகளை அவர் சந்தித்து ஆட்டமிழக்காமல் இருந்து விட்டால் நான் எனது ஒரு பக்க மீசையை எடுத்து விடுகிறேன்' என குறிப்பிட்டிருந்தார். 

 

அதன்படி, தற்போது ரோஹித் ஷர்மாவும் அதிக பந்துகளை எதிர்கொண்ட நிலையில், அந்த நபர் தனது ஒருபக்க மீசையை எடுத்துக் கொண்டு புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்