RRR Others USA

“ஜடேஜாவால தோனிக்கு தான் தலைவலி”.. சிஎஸ்கே அணியில் இருக்கும் பிரச்சனை.. முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ஜடேஜா தான் தலைவலியாக இருப்பதாக ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஜடேஜாவால தோனிக்கு தான் தலைவலி”.. சிஎஸ்கே அணியில் இருக்கும் பிரச்சனை.. முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!

ஐபிஎல் தொடரில் கடந்த சீசன் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் சென்னை அணி ஹாட்ரிக் தோல்வி பெறுவது இதுதான் முதல்முறை.

முதலில் பேட்டிங் சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் பவுலிங்கில் தீபக் சஹார் இல்லாதது, புது முக வீரர்களின் சொதப்பலான ஆட்டம் என அடுத்தடுத்து விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இனி வரும் போட்டிகளில் தோல்வியடைந்தால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமாகிவிடும்.

Ex-CSK cricketer Harbhajan points out big flaw in Jadeja Captaincy

இந்த நிலையில் சிஎஸ்கே தொடர் தோல்வி குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘ஜடேஜாவுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பு கிடைத்துவிட்டது. ஆனால் அவரோ ஃபீல்டிங் ரிங்கிற்கு வெளியில் நின்றுக்கொண்டிருக்கிறார். அங்கிருந்து ஒரு கேப்டனால் எந்தவொரு விஷயத்தையும் கையாள முடியாது.

இதனால் அவர் தோனிக்கு தான் தலைவலியை கொடுக்கிறார். விக்கெட் கீப்பர் தோனிதான் ஃபீல்ட் செட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து பணிகளையும் செய்கிறார். தோனிதான் இப்பவும் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருக்கிறார் என நினைக்கிறேன். ஒரு அணியின் சிறந்த ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்றால், ஜடேஜா கண்டிப்பாக வீரர்களுடன் பேசியாக வேண்டும்’ என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இந்த சூழலில் வரும் 9-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது.

CSK, MSDHONI, RAVINDRA JADEJA, IPL, HARBHAJAN SINGH

மற்ற செய்திகள்