'மன உளைச்சலா இருக்கு...' நாங்க ஃபீல்டிங் பண்றப்போ மட்டும் 'அப்படி' பண்றாங்க...! - தேர்ட் அம்பயர் மேல் கடும் விரக்தியில் இங்கிலாந்து அணி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக நேற்று (24.02.2021) தொடங்கி நடைபெற்று வருகிறது.

'மன உளைச்சலா இருக்கு...' நாங்க ஃபீல்டிங் பண்றப்போ மட்டும் 'அப்படி' பண்றாங்க...! - தேர்ட் அம்பயர் மேல் கடும் விரக்தியில் இங்கிலாந்து அணி...!

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்ததாக களமிறங்கி ஆடியது. அப்போது மூன்றாவது நடுவரால், இங்கிலாந்து அணி அதிருப்தி அடைந்துள்ளது. நேற்று இந்தியா பேட்டிங் செய்கையில் சுப்மன் கில், பேட்டில் பட்ட பந்தை, ஸ்டோக்ஸ் தரையில் படும்படி கேட்ச் பிடித்தார். இதனை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர், வழக்கத்திற்கு மாறாக விரைவில் முடிவை அறிவித்தார்.

அதேபோல் ரோகித்தை ஸ்டம்பிங் செய்யும் முயற்சியில் இங்கிலாந்து அணி ஈடுபட்டபோது, அதனை ஆய்வு செய்த தேர்ட் அம்பையர் பல கோணங்களில் பார்க்காமல் முடிவை உடனடியாக அறிவித்தார்.

இதனால் இங்கிலாந்து அணி கடும் அதிருப்தி அடைந்ததோடு, இதுபற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும், அந்த அணியின் பயிற்சியளாரும் போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்திடம் பேசியுள்ளனர்.

இதுபற்றி இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி, “நாங்கள் பேட் செய்தபோது, ஜாக் லீச் பேட்டில் பட்டுச் சென்ற பந்து கேட்ச்சாகவில்லை. அவர்கள் அதை ஐந்து அல்லது ஆறு வெவ்வேறு கோணங்களில் பார்த்தது போல் தோன்றியது. நாங்கள் ஃபீல்டிங் செய்யும்போது அவர்கள் ஒரு கோணத்தில் மட்டுமே பார்த்தார்கள். அதுதான் மன உளைச்சலாக இருக்கிறது.

அவர்கள் அவுட்டா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நான்கு அல்லது ஐந்து கோணங்களில் ஆய்வு செய்யப்படாததால்தான் விரக்தி என நினைக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்