"ஒண்ணா சேர்ந்து 'சூப்பரா' ஆடிட்டு இருந்தோம்.. திடீர்ன்னு 'மேக்ஸ்வெல்'லுக்கு என் மேல 'கோபம்' வந்துடுச்சு.." போட்டிக்கு நடுவே நடந்தது என்ன??.. மனம் திறந்த 'டிவில்லயர்ஸ்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனை மிகவும் சிறப்பாக தொடங்கியுள்ளது.

"ஒண்ணா சேர்ந்து 'சூப்பரா' ஆடிட்டு இருந்தோம்.. திடீர்ன்னு 'மேக்ஸ்வெல்'லுக்கு என் மேல 'கோபம்' வந்துடுச்சு.." போட்டிக்கு நடுவே நடந்தது என்ன??.. மனம் திறந்த 'டிவில்லயர்ஸ்'!!

இதுவரை தாங்கள் ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதனிடையே, நேற்று கொல்கத்தா அணிக்கு நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 204 ரன்கள் எடுத்து அசத்தியது. இந்த போட்டியில், பெங்களூர் அணி வீரர்களான மேக்ஸ்வெல் (Maxwell) மற்றும் டிவில்லியர்ஸ் (Devilliers) ஆகியோர் நாலாபுறமும் பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர்.

மேக்ஸ்வெல் 78 ரன்களும், டிவில்லியர்ஸ் 76 ரன்களும் எடுத்திருந்த நிலையில், கடின இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியால் 166 ரன்களே எடுக்க முடிந்தது. தொடர்ந்து பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில், டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

போட்டிக்கு பிறகு பேசிய டிவில்லயர்ஸ், 'மேக்ஸ்வெல்லுடன் இணைந்து ஆடியது, நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. நாங்கள் இருவரும், ஒரே மாதிரியான ஆற்றலை உடையவர்கள். நான் பேட்டிங் ஆட உள்ளே வந்ததும், இருவரும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. அதனை சிறப்பாக செய்தும் காட்டினோம்' என்றார்.

மேலும், தன்னுடன் இணைந்து ஆடிய போது, ஒரு விஷயத்திற்காக தன்னிடம் மேக்ஸ்வெல் கோபப்பட்டது பற்றிப் பேசிய டிவில்லியர்ஸ், 'நான் பேட்டிங் ஆட வந்த போது, மேக்ஸ்வெல் மிகவும் சோர்வாக இருப்பதை நான் உணர்ந்தேன். அவர் என்னிடம் வந்து, "தன்னால் அதிகமாக ஓட முடியாது" என்று கூறினார். ஆனால், நான் ஆரம்பத்திலேயே 2,3 ரன்கள் வரை ஓடியே எடுத்ததால், மேக்ஸ்வெல் என் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார்' என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்