'ஒரு மேட்ச் கூட நாங்க தோற்க மாட்டோம்...' 'கப்பும் இந்த தடவ நாங்க தான்...' - செம confidence-ல் 'அந்த' டீம் கேப்டன்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புவதாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

'ஒரு மேட்ச் கூட நாங்க தோற்க மாட்டோம்...' 'கப்பும் இந்த தடவ நாங்க தான்...' - செம confidence-ல் 'அந்த' டீம் கேப்டன்...!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு மார்ச் 29 - மே 4 வரை நடத்த திட்டமிடப்பட்டது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால்,கொரோனா வைரஸ் தொற்று பயம் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தொடர், வரும்19-ம் தேதி முதல் நவ.10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து வீரர்கள் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். இதுவரை நடந்த 12 ஐ.பி.எல் போட்டி வரலாற்றிலும் எந்த ஒரு அணியும் தோல்வியை சந்திக்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது இல்லை.

இந்த நிலையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், லீக் முதல் இறுதி வரை அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,  ஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன். இதற்காக எங்கள் அணி வீரர்கள் அனைவரும் இந்த சீசனில் கடுமையாக விளையாடுவார்கள் என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்