'இனி சென்னை அணியில்'... 'அவர் விளையாடுவாரா, மாட்டாரா???'... 'ரெய்னா குறித்து'... 'CSK நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கேவிற்காக விளையாடுவாரா என்பது குறித்து அணி நிர்வாகம் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளது.

'இனி சென்னை அணியில்'... 'அவர் விளையாடுவாரா, மாட்டாரா???'... 'ரெய்னா குறித்து'... 'CSK நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்!!!'...

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று மும்பை நைட் கிளப்பில் விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்டு, பின் சில நிமிடங்களில் பெயிலில் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு குறைவதற்குள் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தாண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறிய ரெய்னா தொடர் முழுவதுமாகவே விளையாடவில்லை. இதற்கு ரெய்னாவின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டது, சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் எனப் பல காரணங்கள் கூறப்பட்டது.

CSK Will Not Part Ways With Suresh Raina Ahead Of IPL 2021

இதையடுத்து அடுத்த சீசனிலும் ரெய்னா சென்னை அணிக்காக விளையாட வாய்ப்பில்லை எனக் கூறப்பட்ட நிலையிலேயே தற்போது சுரேஷ் ரெய்னாவை அணியிலிருந்து நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே நிர்வாகத்தினர், "சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே தொடர்ந்து அணியில் நீடிப்பார். அவர் கைது குறித்து செய்தியில் மட்டுமே படித்தோம். இதற்கும் ஐபிஎல்லிற்கும் தொடர்பு இல்லை. அவரை நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை" எனத் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா விளையாடுவது உறுதியாகியுள்ளது.

மற்ற செய்திகள்