Kadaisi Vivasayi Others

போன ஐபிஎல் சீசனில் வைரலான வீரரை.. கட்டம் கட்டி தூக்கிய 'சிஎஸ்கே'.. செம 'குஷி'யில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலம் தற்போது பெங்களூரில் வைத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போன ஐபிஎல் சீசனில் வைரலான வீரரை.. கட்டம் கட்டி தூக்கிய 'சிஎஸ்கே'.. செம 'குஷி'யில் ரசிகர்கள்

மொத்தம் 10 அணிகள் பங்கேற்று வரும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், ஒவ்வொரு வீரரை எடுக்கவும், பல அணிகள் வேற மாதிரி போட்டி போட்டது.

இதனால், அனைத்து அணிகளின் ரசிகர்கள் மத்தியிலும், தங்கள் ஃபேவரைட் அணிகள் எந்தெந்த வீரர்களை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

அனைத்து அணிகளும், கடந்த ஆண்டில் இருந்து மாறுபட்டு, புது புது வீரர்களை தேர்வு செய்து வரும் நிலையில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டும், கடந்த ஆண்டு தங்கள் அணியில் ஆடிய வீரர்களை மட்டுமே எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 4 வீரர்களை எடுத்துள்ளது.

இந்த 4 வீரர்களுமே கடந்த ஆண்டு, சிஎஸ்கே அணியில்  ஆடிய வீரர்கள் தான். பிராவோ, அம்பத்தி ராயுடு மற்றும் உத்தப்பா ஆகிய வீரர்களை எடுத்திருந்தது. தொடர்ந்து, நான்காவதாக சிஎஸ்கே அணி எடுத்த வீரர் தான், தற்போது மிகப் பெரிய பேசுப் பொருளாகியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை, மீண்டும் சென்னை அணி எடுத்துள்ளது. அதுவும், 14 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது தான், சிறப்பம்சமாக உள்ளது.

கடந்த சீசனில், சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையைத் தட்டிச் சென்றிருந்தது. ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த சமயத்தில், தன்னுடைய காதலியை போட்டி ஒன்றிற்கு பிறகு, தீபக் சாஹர் Propose செய்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஏலத்தில் புதிய வீரர்கள் பலர் வந்த போதும், அவர்களை எடுக்க சிஎஸ்கே அணி முயற்சி மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து, முந்தைய சீசன்களில், ஆடிய வீரர்களைத் தான் மீண்டும் மீண்டும் தேர்வு செய்து வருகின்றனர். இது பற்றி, சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

CSK, DEEPAK CHAHAR, IPL AUCTION 2022

மற்ற செய்திகள்