‘மனுசன் பாட்டி இறந்த சோகத்தை மறச்சிட்டா விளையாடியிருக்காரு’.. சிஎஸ்கே ‘ஸ்டார்’ ப்ளேயர் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாட்டி இறந்த சோகத்துடன் போட்டியில் கலந்துகொண்டதாக சென்னை அணியின் முன்னணி வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

‘மனுசன் பாட்டி இறந்த சோகத்தை மறச்சிட்டா விளையாடியிருக்காரு’.. சிஎஸ்கே ‘ஸ்டார்’ ப்ளேயர் உருக்கம்..!

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் டெல்லி அணிக்கு இடையேயான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. முன்னதாக ராஜஸ்தான் அணியுடனான போட்டியிலும் சென்னை அணி தோல்வி அடைந்தது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

CSK player Watson grandmother passed away during CSKvDC match

இந்த நிலையில் சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான வாட்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் என் குடும்ப உறுப்பினர்களுக்கு என்னுடைய ஆறுதலை அனுப்புகிறேன். என் அம்மாவின் அம்மா இறந்துவிட்டார். இப்போது என்னால் என் குடும்பத்தை சந்திக்க முடியாது. அதனால் என்னுடைய அன்பை அவர்களுக்கு ஆறுதலாக அனுப்புகிறேன்’ என வாட்சன் பதிவிட்டுள்ளார்.

அன்றைய போட்டியில் பாட்டி இறந்த சோகத்துடனேயே வாட்சன் விளையாடியதாக தெரிகிறது. அப்போட்டியில் வாட்சன் 14 ரன்களில் அவுட்டானார். கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் காலில் ரத்தம் வழிய வழிய தனிஒருவனாக சென்னை அணிக்காக வாட்சன் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்சனின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் உருக்கமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

CSK player Watson grandmother passed away during CSKvDC match

மற்ற செய்திகள்