இன்று தனது திருமண நாளை கொண்டாடிய சென்னை அணியின் சின்ன தல!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

 

இன்று தனது திருமண நாளை கொண்டாடிய சென்னை அணியின் சின்ன தல!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல ரெய்னா இன்று தனது 4 ஆவது திருமண நாளை கொண்டாடுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். தற்போது, 12ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். கடந்த போட்டியின் போது ஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இன்றைய போட்டியில் ஒரு கேட்ச் பிடித்தால், ஐபிஎல் வரலாற்றில் 100 கேட்சுகள் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி சுரேஷ் ரெய்னா – பிரியங்கா சௌத்ரி திருமணம் நடந்தது.மேலும், இவர்களுக்கு கிரேஸியா என்ற 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றுடன் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், சுரேஷ் ரெய்னா – பிரியங்கா சௌத்ரியின் திருமண புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் காண: https://twitter.com/ImRaina/status/1113361706619559937

இந்நிலையில், 4ஆவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று நாங்கள் அன்பு மற்றும் ப்ரண்ட்ஷிப்பை கொண்டாடுகிறோம். நான், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் என்னுடன் இருந்த உனக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

SURESHRAINA, WEDDING ANNIVERSARY