"இன்னும் ஐபிஎல் 'date' கூட கன்ஃபார்ம் பண்ணல... அதுக்குள்ள 'தல' தோனி 'ரெடி' ஆயிட்டாரு..." குதூகலத்தில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்.. "இப்போவே start 'பண்ணிட்டோம்'ல"!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர், மீண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

"இன்னும் ஐபிஎல் 'date' கூட கன்ஃபார்ம் பண்ணல... அதுக்குள்ள 'தல' தோனி 'ரெடி' ஆயிட்டாரு..." குதூகலத்தில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்.. "இப்போவே start 'பண்ணிட்டோம்'ல"!!

இதற்கான ஐபிஎல் ஏலம், கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் வைத்து நடைபெற்றிருந்ததையடுத்து, பெரும்பாலான வீரர்கள், இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தனர். ஐபிஎல் ஏலம் முடிவடைந்த பிறகு, ஐபிஎல் போட்டிகள் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம், ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டி, நேற்று சென்னை வந்தடைந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை, சென்னை அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் தேதி கூட இன்னும் பிசிசிஐ அறிவிக்காத நிலையில், அதற்கு முன்னரே பயிற்சியை மேற்கொள்ள வேண்டி, தோனி சென்னை வந்தடைந்துள்ளதால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

ட்விட்டரில் சில ஹேஸ்டேக்குகளையும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மற்ற சென்னை வீரர்களான அம்பத்தி ராயுடு, சாய் கிஷோர், ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோரும் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த, ஓய்வில் இருக்கும் மற்ற வீரர்களும் விரைவில் அணியுடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்தில், மொயீன் அலி, புஜாரா, கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்