“எனக்கு முன்னாடியே பொல்லார்டு ஓய்வு பெறுவார்னு நெனக்கவே இல்ல”.. கிரிக்கெட் ஜாம்பவான் டுவிட்டரில் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வீரர் பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து கிறிஸ் கெய்ல் ட்வீட் செய்துள்ளார்.

“எனக்கு முன்னாடியே பொல்லார்டு ஓய்வு பெறுவார்னு நெனக்கவே இல்ல”.. கிரிக்கெட் ஜாம்பவான் டுவிட்டரில் உருக்கம்..!

Also Read | "குறைப்பிரசவம்... தவறாக புரிந்து கொள்ளப்பட்டது" - மன்னிப்பு கோரிய இயக்குனர் பாக்யராஜ்.. வீடியோ

கடந்த 2007-ம் சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பொல்லார்டு அறிமுகமனார். இதுவரை அந்நாட்டுக்காக 196 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். அதில் 4275 ரன்களும், 97 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார். இது தவிர உலக அளவில் நடைபெறும் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பொல்லார்டு விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக அணியில் முக்கிய வீரராக இவர் இருந்து வருகிறார். இவருக்கென இந்தியாவில் ரசிகர் பட்டாளமும் உள்ளது. இந்த நிலையில் திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்டு அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

Chris Gayle react on Pollard retirement from international cricket

தற்போது பொல்லார்டின் ஓய்வுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பிரியாவிடை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘நான் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே நீங்கள் ஓய்வு பெற்றுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு வாழ்த்துகள். உங்களது அடுத்த அத்தியாயத்திற்கு எனது வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரேன், ‘இது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தேவையானதை அளிக்கும் திறன் இன்னும் அவரிடம் உள்ளது. ஆனால், தனக்கு ஓய்வு பெற வேண்டிய சரியான நேரம் இதுதான் என அவர் நினைத்துள்ளார். அதுதான் முக்கியம்’ என பொல்லார்டு ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CRICKET, CHRIS GAYLE, POLLARD, INTERNATIONAL CRICKET, WEST INDIES, KIERON POLLARD, பொல்லார்டு, வெஸ்ட் இண்டீஸ் அணி

மற்ற செய்திகள்