'அப்படி' சொன்ன உடனே 'கோவம்' சுர்றுன்னு தலைக்கு ஏறிடுச்சு...!பாய்ந்து வந்து 'ஸ்பியர்' போட்ட பிளேயர்...! - ரணகளமான ஃபுட்பால் கிரவுண்ட்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரேசில் நாட்டில் குரானி பகுதியில் உள்ளூர் கால்பந்து லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

'அப்படி' சொன்ன உடனே 'கோவம்' சுர்றுன்னு தலைக்கு ஏறிடுச்சு...!பாய்ந்து வந்து 'ஸ்பியர்' போட்ட பிளேயர்...! - ரணகளமான ஃபுட்பால் கிரவுண்ட்...!

பொதுவாக கால்பந்து போட்டிகளில் வீரர்களுக்கு இடையே சண்டை வருவதோடு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் ரெஃப்ரிகளுக்கும் இடையேயும் மோதல்கள் அதிகமாக நடக்கிறது.

Brazilian player is charged with attempting kill a referee

ஒரு சில போட்டிகளில் கால்பந்து தெரிந்தே ரெஃப்ரிகளின் மீது எறியப்படும். இந்நிலையில் குரானி நடைபெற்று வந்த உள்ளூர் கால்பந்து போட்டியிலும் சா பாலோ ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வீரர் வில்லியம் ரிபைரோ விதிகளுக்கு மாறாக ஆடியதாக நடுவர் அறிவித்துள்ளார்.

Brazilian player is charged with attempting kill a referee

நடுவரின் அறிவிப்பால் உச்சக்கட்ட கோவம் ஆன கால்பந்து வீரர் வில்லியம் ரிபைரோ போட்டி நடுவரை தன் தலையால் முட்டி கீழே தள்ளி காலால் பயங்கரமாக  உதைத்தார். இதனால் கீழே விழுந்த நடுவர் வலியால் துடித்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Brazilian player is charged with attempting kill a referee

இந்த சம்பவம் காவல்துறைக்கு புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றுள்ளது.நடுவரை தாக்கிய கால்பந்து வீரர் வில்லியம் ரிபைரோ மீது காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தால் கால்பந்து வீரர் வில்லியம் ரிபைரோ தங்களின் அணியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக சா பாலோ ஸ்போர்ட்ஸ் கிளப் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்